×

அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கவுன்சிலிங்

 

ஈரோடு, ஜூலை 25: ஈரோட்டில் அரசு நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. நேற்று அரசு நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெறுவதற்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆன் லைனில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு 2 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர்.இதேபோல், முதுகலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நேற்று நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் முதுகலை ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வில் 79 பேர் மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெற்றனர்.

The post அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கவுன்சிலிங் appeared first on Dinakaran.

Tags : Schools ,Erode ,Government Municipal High School ,Dinakaran ,
× RELATED ஈரோடு செட்டிபாளையத்தில் உள்ள தனியார்...