×

பட்டு சேலை பண்டல்கள் மாயம்

வேடசந்தூர், ஜூலை 25: சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்தில் இருந்து பட்டு சேலைகளை பண்டல்களாக ஏற்றி கொண்டு மதுரையை நோக்கி நேற்று லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை சண்முகம் என்பவர் ஓட்டி சென்றார். வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டி பகுதியில் வந்த பின்னால் வந்த லாரி டிரைவர், லாரியை முந்தி செல்லும் போது சண்முகத்தை பார்த்து, ‘லாரியின் தார் பாய் கழன்று உள்ளது, சரிசெய்து விட்டு செல்லுங்கள்’ என கூறியுள்ளார். இதையடுத்து சண்முகம் லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு மேலே ஏறி பார்த்த போது மூன்று பட்டு சேலை பண்டல்கள் காணாமல் போய் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரில் வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பட்டு சேலை பண்டல்கள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Yumapillai ,Salem district ,Madurai ,Shanmugam ,Minukkampatti ,
× RELATED வேடசந்தூரை வட்டமடித்தபடி போர் விமானம் தாழ்வாக பறந்ததால் மக்கள் அச்சம்