×

தேவகோட்டை அருகே வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

தேவகோட்டை, ஜூலை 24:தேவகோட்டை அருகே, ஆட்டோ டிரைவர் வீட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணத்தை திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர். தேவகோட்டை அருகே கண்ணங்குடி யூனியனுக்குட்பட்ட மணக்குடியை சேர்ந்தவர் அருளானந்து. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பாண்டிச்செல்வி (38). நேற்று முன்தினம் காலை பயணிகளை ஏற்றி செல்வதற்காக அருளானந்து வெளியில் சென்றுவிட்டார். 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிவதற்காக அருகே உள்ள பகுதிக்கு பாண்டிச்செல்வி சென்றிருந்தார்.

இந்நிலையில் காலை 11.30 மணியளவில் அவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதாக பாண்டிச்செல்விக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்கு விரைந்து சென்றார். அங்கு பாண்டிச்செல்வியை பார்த்த மர்ம நபர், கையிலிருந்த இரும்பு ராடால் அவரை தாக்கினார். பின்னர் பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பியோடினார். புகாரின்பேரில் தேவகோட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.

The post தேவகோட்டை அருகே வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Devakottai ,Arulanandu ,Manakudi ,Kannankudi Union ,Pandichelvi ,
× RELATED திருமண மண்டபத்தில் தீ விபத்து