×

ஜூலை 26ல் வேளாண் குறைதீர் கூட்டம்

 

ஈரோடு, ஜூலை 24: ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 26ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  ன்ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 26ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவிக்கலாம். பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை அலுவலர்களின் விளக்கங்களும் தெரிவிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post ஜூலை 26ல் வேளாண் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,Collector ,Raja Gopal Sunkara ,Neerodu ,Grievance Redressal Meeting ,Dinakaran ,
× RELATED ஐபிஎஸ் மனைவியை விட்டுவிட்டு பெண்...