×

கோழி திருடியவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 24: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, கோபிநாதம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாதுரை(55). அதே பகுதியில் கறிக்கோழி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மீண்டும் நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கூண்டில் இருந்த சுமார் 25 கிலோ எடையுள்ள கோழிகள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து கோபிநாதம்பட்டி போலீசில் அண்ணாதுரை புகார் அளித்தார். இதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் கொக்கராப்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(40) என்பவரை பிடித்து விசாரித்ததில், 10க்கும் மேற்பட்ட கோழிகளை திருடியதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அரூர் கிளை சிறையிலடைத்தனர்.

The post கோழி திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Papriprettipatti ,Annadurai ,Gopinathampatti ,Dinakaran ,
× RELATED அயல் நாடுகளுக்கு சென்று உயர்கல்வி...