×

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

வாடிப்பட்டி, ஜூலை 24: பரவை அருகே சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (27). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன் தினம் இரவு பவர் ஹவுஸ் பஸ் பேருந்து நிறுத்தத்திலிருந்து சத்தியமூர்த்தி நகரில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இருவர் ஆறுமுகத்தை வழிமறித்து கம்பால் தாக்கி விட்டு அவரிடமிருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஒடியுள்ளனர். இது குறித்து சமயநல்லூர் போலீசில் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட பவர் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷன் வயது(22), சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த இஸ்ரவேல் வயது(27) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Vadipatti ,Arumugam ,Satyamoorthy ,Paravai ,Sathyamurthy Nagar ,Power House ,Dinakaran ,
× RELATED சோழவந்தான் ரயில்வே பாலத்தில் அடிக்கடி விபத்து: வேகத்தடை அமைக்க கோரிக்கை