×

கொடநாடு கொலை வழக்கில் 4 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

ஊட்டி: கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கை தற்போது கோவை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு, உதயகுமார் ஆகியோர் நாளையும், ஜித்தின் ஜாய் மற்றும் ஜம்ஷீர் அலி ஆகியோர் வரும் 30ம் தேதியும் கோவையில் உள்ள சிபிசிஐடி போலீசார் அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

The post கொடநாடு கொலை வழக்கில் 4 பேருக்கு சிபிசிஐடி சம்மன் appeared first on Dinakaran.

Tags : CBCID ,Koda Nadu ,Kerala ,Sayan ,Valaiyar Manoj ,Jayalalithaa ,Sasikala ,Dinakaran ,
× RELATED கொடநாடு வழக்கு தற்கொலை செய்த...