×

குடிநீர் தொட்டி அமைக்க கோரிக்கை

 

ராமநாதபுரம், ஜூலை 23:பெரியகுளம் பஞ்சாயத்தில் கூடுதல் தேவை கருதி மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்க கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், கடலாடி ஒன்றியம்,பெரியகுளம் கிராமமக்கள் மனு அளித்தனர்.

இதில் அவர்கள் கூறியிருப்பதாவது, கடலாடி ஒன்றியம், பெரியகுளம் பஞ்சாயத்தில் 2000 பொதுமக்கள் வசித்து வருகிறோம். இங்கு மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வழங்க தற்போதைய கரூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணி இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி போன்றவை நடந்து வருகிறது. இதில் ஒரு தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மற்றொரு தொட்டி பெரியகுளம் சீனிநாதபுரத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

The post குடிநீர் தொட்டி அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Periyakulam ,People's Grievance Redressal Day ,Ramanathapuram Collector's Office ,Kadladadi Union ,Dinakaran ,
× RELATED ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம்