×

படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம்

 

திருவாடானை, ஜூலை 23: திருவாடானையில் இருந்து வெளியூருக்கு படிக்க செல்லும் பள்ளி மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாடானை பேருந்து நிலையத்தில் இருந்து தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மூலமாக அங்கு படிக்கும் மாணவிகள் சென்று வருகின்றனர். இரண்டு நாட்கள் பள்ளி விடுமுறை முடித்து நேற்று செல்லும் மாணவர்கள் அதிகமானோர் பஸ்சிற்காக காத்து இருந்த நிலையில்,

திருச்சி செல்லக் கூடிய பேருந்தில் அதிகப்படியான மாணவர்கள் படியில் தொங்கியவரே ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். எனவே தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளி கல்லூரி திறக்கும் சமயத்தில் மாணவ,மாணவிகளின் தேவை கருதி கூடுதல் பஸ் இயக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Thiruvadan Bus Station… ,
× RELATED திருவாடானை அருகே புதிய ரேஷன் கடை கட்டுமானப் பணி ஸ்பீடு