×

விராலிமலை அருகே அனுமதியின்றி மது பாட்டில் விற்றவர் கைது

 

விராலிமலை,ஜூலை 23: விராலிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அரசு மதுபாட்டில்களை சிலர் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் விராலிமலை அருகே உள்ளே சித்திரம்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சித்திரம் பட்டியை சேர்ந்த மாமுண்டி என்பவர் அவரது கடையில் வைத்து அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்வதை கண்டறிந்து போலீசார் அவரை கைது செய்தனர் . தொடர்ந்து விற்பனைக்காக அவர் வைத்திருந்த 18 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post விராலிமலை அருகே அனுமதியின்றி மது பாட்டில் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Viralimalai Police ,Inspector ,Anbazagan ,
× RELATED விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதி பள்ளிகளில் ஆசிரியர் தின விழா