×

கொள்ளிடம் அருகே ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி

 

கொள்ளிடம், ஜூலை 23: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாங்கனாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அவர் நேற்று மாங்கனாம்பட்டு கிராமத்தில் உள்ள அவர் வீட்டிற்கு வந்தார். அவருக்கு காய்ச்சல் இருந்து வந்தது. இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், ஊராட்சி மன்றத் தலைவர் கனகராஜ், துணைத் தலைவர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் நேற்று மாங்கனாம்பட்டு கிராமத்திற்கு நேரில் சென்று பரிசோதனை செய்ததில் அந்த நபருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. கொரோனா மாவட்ட அளவில் எங்கும் காணப்படாத நிலையில், சென்னையிலிருந்து வந்த அவருக்கு நேற்று அதற்கான அறிகுறி இருந்து வருவதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

The post கொள்ளிடம் அருகே ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி appeared first on Dinakaran.

Tags : Kollid ,Kollidam ,Manganampattu ,Mayiladuthurai district ,Chennai ,
× RELATED கொள்ளிடம் அருகே குமிளங்காடு சுயம்பு...