×

பாஜ மாநில தலைவர் அண்ணாமலை இன்று குமரி வருகை

நாகர்கோவில், ஜூலை 23: தென்னிந்தியாவின் முதல் பாஜ எம்எல்ஏ சி.வேலாயுதன் கடந்த மே மாதம் 7ம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவையொட்டி நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (23ம் தேதி) காலை 10 மணிக்கு நாகர்கோவில் அருகே கீழக்கருப்புகோட்டில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். இதில் பாஜ நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

The post பாஜ மாநில தலைவர் அண்ணாமலை இன்று குமரி வருகை appeared first on Dinakaran.

Tags : BJP ,state president ,Annamalai ,Kumari ,Nagercoil ,South India ,MLA ,C. Velayuthan ,
× RELATED எடப்பாடி குறித்து சர்ச்சை கருத்து...