×

பொன்னமராவதி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

 

பொன்னமராவதி,ஜூலை 22: பொன்னமராவதி அருகே கிணற்றில் தவறிவிழுந்து விவசாயி ஒருவர் உயிரிழந்தார். பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியத்தை சேர்ந்தவர் குமார்(44). இவர் மனைவி இறந்துவிட்ட நிலையில் தனியாக கீழத்தானியத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு குளிக்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை எனக்கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர்கள் அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்துள்ளனர்,

இதனையடுத்து நேற்று காலை குமாருக்கு சொந்தமான கிணற்றில் இறந்த நிலையில் அவர் கிடந்துள்ளார். இதைக்கண்ட உறவினர்கள் காரையூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த காரையூர் சப் இன்ஸ்பெக்டர் அருணகிரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொன்னமராவதி தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் குமாரின் உடலை மீட்டுள்ளனர். பின்னர் அவர் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பொன்னமராவதி அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati ,Kumar ,Lower Thaniyam ,Lower Thailand ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி ஒன்றியத்தில் 42...