×

தனியார் ஊழியரிடம் ரூ.16.30 லட்சம் மோசடி

 

கிருஷ்ணகிரி, ஜூலை 22: ஓசூர் அடுத்த குருப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (38), தனியார் நிறுவன ஊழியர். இவரது செல்போனுக்கு கடந்த 15.5.2024 அன்று, ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என இருந்தது. இதையடுத்து குமார் பல்வேறு தவணைகளில் ரூ.16 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை செலுத்தினார். ஆனால், அதற்கான லாபமும், முதலீடு பணமும் கிடைக்கவில்லை. குறுந்தகவல் வந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குமார் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தனியார் ஊழியரிடம் ரூ.16.30 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Kumar ,Hosur ,Kurupatti ,Dinakaran ,
× RELATED ஓசூர் மாணவி வெண்கல பதக்கம் வென்று சாதனை