×

ரூ.3.75 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை

 

கடத்தூர், ஜூலை 22: கடத்தூர் பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்று கிழமைகளில் வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வெற்றிலை வாங்க வருவர். இங்கு மணியம்பாடி, நல்லகுட்டலஹள்ளி, கோம்பை, அஸ்தகியூர், முத்தனூர், கேத்திரெட்டிப்பட்டி, அய்யம்பட்டி, வேப்பிலைபட்டி, காவேரிபுரம் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், 30க்கும் மேற்பட்ட வெற்றிலை மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரம் 128 கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.8ஆயிரம் முதல் ரூ.11,500 வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில் ஆரம்ப ரூ.8ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.12,500க்கு விற்பனையானது. இதில் மொத்தம் ரூ.3.75லட்சத்திற்கு வெற்றிலை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ரூ.3.75 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை appeared first on Dinakaran.

Tags : betel ,Kadoor ,Dharmapuri ,Krishnagiri ,Salem ,Maniambadi ,Nallakutalahalli ,Gombai ,Astagyur ,Dinakaran ,
× RELATED மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி