×

பட்டாசு திரி தயாரித்தவர் கைது

 

விருதுநகர், ஜூலை 22: விருதுநகர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு திரி தயாரித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விருதுதுநகர் அருகே ஆனைக்குட்டம் ஏ.மீனாட்சிபுரத்தில் சட்டவிரோதமாக செட் அமைத்து பட்டாசு திரி தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஆனைக்குட்டம் வி.ஏ.ஓ. யாகராஜன் மற்றும் உதவியாளர் ராமகிருஷ்ணன் இருவரும் சோதனை நடத்தினர்.

அப்போது திருத்தங்கல் நடுத்தெருவை சேர்ந்த அருண்சந்திரமோகன்(28) என்பவர் ஏ.மீனாட்சிபுரத்தை சேர்ந்த வெற்றிச்செல்வியின் நிலத்தில் செட் அமைத்து பட்டாசு திரிகள் தயாரிப்பது தெரியவந்தது. ஆமத்தூர் போலீசில் வி.ஏ.ஓ. யாகராஜன் புகாரில் சட்டவிரோதமாக பட்டாசு திரி தயாரித்த அருண்சந்திரமோகனை கைது செய்து, 20 கட்டு பட்டாசு திரிகளை பறிமுதல் செய்தனர்.

The post பட்டாசு திரி தயாரித்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Anaikuttam ,Minatsipuram ,Ministry of Foreign Affairs of the Republic of India ,VV ,Oh. Yagarajan ,
× RELATED விருதுநகரில் காவல்துறையினர் கையில்...