×

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் இன்ஸ்பெக்டருக்கு விபத்து காப்பீட்டு நிதி

 

புதுக்கோட்டை, ஜூலை 21: புதுக்கோட்டையில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் இன்ஸ்பெக்டருக்கு விபத்து காப்பீட்டு நிதி ரூ.70லட்சத்திற்கான காசோலையை குடும்பத்தாரிடம் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பிரியா கடந்த 7.4.24ம் தேதி பணிமுடித்து தனது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை நகர்பகுதியில் வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் அமர்ந்திருந்த காவல் ஆய்வாளர் பிரிவாவுக்கு பின் தலையில் அடிபட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த பெண் காவல் ஆய்வாளர் பிரியாவின் குடும்பத்திற்கு காவல் ஆய்வாளரின் வங்கியின் சம்பள தொகுப்பு திட்டத்தின்கீழ் விபத்து காப்பீட்டு நிதி ரூ.70,00,000த்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே வழங்கினார்.

The post சாலை விபத்தில் உயிரிழந்த பெண் இன்ஸ்பெக்டருக்கு விபத்து காப்பீட்டு நிதி appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,SP ,Vanthita Pandey ,Pudukkota ,Priya ,Thiruverampur Police Station ,Trichy District ,
× RELATED புதுக்கோட்டை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்..!!