×

ராஜபாளையத்தில் இடநெருக்கடியில் ஆர்டிஓ அலுவலகம் புதிய கட்டிடத்தை விரைந்து கட்ட கோரிக்கை

 

ராஜபாளையம், ஜூலை 21: ராஜபாளையம் பகுதியில் டூவீலர், நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓட்டுநர் உரிமம் பெற, புதுப்பிக்க உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு விருதுநகர் செல்ல வேண்டியிருந்தது. இதனால் வீண் அலைச்சல் ஏற்பட்டது. எனவே, ராஜபாளையத்தில் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் துவங்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜபாளையத்தில் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் துவங்கப்பட்டது. தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த வட்டார போக்குவரத்து கிளை அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால் பல்வேறு பணிக்கு இங்கு வருவோர் தங்களது வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் சாலையோரங்களில் நிறுத்துகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உடனடியாக அலுவலகம் கட்டும் பணியை துவக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ராஜபாளையத்தில் இடநெருக்கடியில் ஆர்டிஓ அலுவலகம் புதிய கட்டிடத்தை விரைந்து கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : RTO ,Rajapalayam ,Virudhunagar ,Dinakaran ,
× RELATED பத்மனாபபுரம் ஆர்டிஓ ஆபீசில் இன்று...