×

கோட்டைகரை ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க கோரிக்கை

 

ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 21: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கோட்டைகரைஆற்று பகுதியில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என தொழிலாளர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே கோட்டைக்கரை ஆற்றில், சனவேலி, கொக்கூரணி, செட்டியகோட்டை, ஆனந்துார், கோவிந்தமங்கலம், குலமாணிக்கம் வெட்டுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றில் மணல் உள்ளது. இப்பகுதிகளில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளி விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும் என மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘கோட்டைக்கரை ஆற்றில், மாட்டுவண்டிகள் மூலம் மணல் அள்ளிச் செல்வதற்கு அரசு அனுமதி வழங்கி ஏழை எளிய தொழிலாளர்களின் நலனை காக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post கோட்டைகரை ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kottaykari River ,R. ,MANGALAM ,Kottikrayaatu ,Kottayakrai River ,Sanaveli ,Kokurani ,Setikottai ,Anandoor ,Govindamangalam ,Kulamanikam ,Dinakaran ,
× RELATED ஆற்றில் மணல் திருட்டு ஜேசிபி, லாரி பறிமுதல்