×

உறவினர்கள் சாலை மறியல்

 

ராமநாதபுரம், ஜூலை 20: திருஉத்தரகோசமங்கை அருகே வடக்கு மல்லலைச் சேர்ந்தவர் தங்கச்சாமி மனைவி தவசித்ரா (26) இவர் கடந்த 14ம் தேதி உத்தரகோசமங்கை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2து பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு பெண்குழந்தை பிறந்தது. இதையடுத்து பெரியபட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தவசித்ரா உரிய சிகிச்சை பலனின்றி இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் நேற்று ராமநாதபுரத்தில் சாலை மறியல் ஈடுபட்டனர். இறந்த தவசித்ரா குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடும், அவரின் கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

The post உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Thavasitra ,Thangachami ,North Mallal ,Thiruuttharakosamangai ,Uttarakosamangai Primary Health Center ,Periyapattinam government ,
× RELATED ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம்