×

ஐகோர்ட் மதுரை கிளை 20ம் ஆண்டு விழா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்பு

 

மதுரை, ஜூலை 20: ஐகோர்ட் மதுரை கிளை கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில் 20 ஆண்டுகள் நிறைவடைந்து 21ம் வருடத்தில் ஐகோர்ட் கிளை அடியெடுத்து வைக்கிறது. 20ம் ஆண்டின் நிறைவு விழா இன்று (ஜூலை 20) மதுரை தமுக்கம் மைதான அரங்கில் நடைபெறுகிறது. இதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்ளிட்ட நீதிபதிகள் பங்கேற்கின்றனர். இதையொட்டி ஐகோர்ட் மதுரை கிளையில் 20ம் ஆண்டு நிறைவு தூண் திறக்கப்பட உள்ளது.

இவ்விழாவில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று மாலை பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் மதுரை வந்தார். மதுரை, கோச்சடையில் உள்ள தனியார் விடுதியில் இரவு தங்கிய அவர் , இன்று தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். பின்னர் காரில் ராமேஸ்வரம் புறப்பட்டு செல்கிறார். இதன் தொடர்ச்சியாக அங்கு தங்கியிருக்கும் அவர், நாளை மாலை மதுரை திரும்பி விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

The post ஐகோர்ட் மதுரை கிளை 20ம் ஆண்டு விழா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chief Justice ,iCourt Madurai Branch ,Madurai ,iCourt branch ,ICourt Madurai ,Branch ,Dinakaran ,
× RELATED பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே...