×

மக்களுடன் முதல்வர் முகாம்: எம்எல்ஏ மனுக்களை பெற்றார்

திருவள்ளூர்: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நேமம், ஜமீன்கொரட்டூர், கொசவன் பாளையம், மேல்மனம்பேடு ஆகிய ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் முகாம் நேமம் ஊராட்சி ஆண்டர்சன் பேட்டையில் நடைபெற்றது. முகாமிற்கு வட்டாட்சியர் ரா.கோவிந்தராஜ், தனி வட்டாட்சியர் சரஸ்வதி, ஒன்றிய திமுக செயலாளர் டி.தேசிங்கு, ஒன்றிய ஆணையர் க.வெங்கடேசன், ஒன்றிய குழு துனை தலைவர் பரமேஷ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் என்.பி.மாரிமுத்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் நேமம் ஜெ.பிரேம்நாத் கொரட்டுர் இ.கந்தபாபு கொசவன்பாளையம் ச.அண்ணாகுமார் நிறைமதி தங்கராஜ், துணை தலைவர் விஜயா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பொதுமக்களிடம் இருந்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் அருள்குமார், வருவாளர் ஆய்வாளர் ஐயப்பன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஏ.மகேஷ்குமார், மோகன், அல்போன்சா, மணிவண்ணன், ஒன்றிய நிர்வாகிகள் பா.கந்தன், கட்டதொட்டி எம்.குணசேகர் ஜி.சுகுமார், சுமதி விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post மக்களுடன் முதல்வர் முகாம்: எம்எல்ஏ மனுக்களை பெற்றார் appeared first on Dinakaran.

Tags : CM ,MLA ,Thiruvallur ,Chief Minister ,Nemam ,Zaminkoratur ,Kosavan ,Palayam ,Melmanampedu ,Panchayats ,Poontamalli Panchayat Union ,Nemam Panchayat Anderson Pettai ,District Collector ,Ra.Govindaraj ,Separate ,District ,Collector ,Saraswathi ,Union DMK ,T.Desingu ,
× RELATED சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 6 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பதிவு!