×

அருமனை அருகே மழைநீர் ஓடை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம் பொதுமக்கள் போராட்டம்

அருமனை, ஜூலை 20 : மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து மஞ்சாலுமூடு ஊராட்சிக்கு உட்பட்ட முக்கூட்டுக்கல் பகுதியில் ரூ.9 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் 260 மீட்டர் நீளத்தில் மழைநீர் ஓடை கட்டும் பணி துவங்கப்பட்டது.இதுகுறித்து அறிந்த ஊர்மக்கள் அப்பகுதியில் திரண்டு பணியை தடுத்து நிறுத்தினர். மழை நீர் ஓடையில் வரும் நீரானது வடிந்து செல்வதற்கு வாய்ப்பில்லை என்றும், அந்த நீர் மழை நீர் ஓடை கட்டி முடிந்ததும் முக்கூட்டுக்கல் சந்திப்பில் தேங்கி துர்நாற்றம் வீச வாய்ப்புள்ளது என்றும், ஆகையால் மழை நீர் ஓடை ஏதாவது ஒரு குளத்தை நோக்கி செல்லும் வகையில் அமைத்து பின்பு பணியை தொடர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறினர்.

The post அருமனை அருகே மழைநீர் ஓடை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம் பொதுமக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Aruman ,ARUMANAI ,MANJALUMUDU URATCHI AREA ,DISTRICT ADMINISTRATION ,Arumani ,Dinakaran ,
× RELATED அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு...