×

உடைத்து திருட்டு

தர்மபுரி, ஜூலை 20: காரிமங்கலம் அருகே பந்தாரள்ளி சென்றாய பெருமாள் கோயில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் கோயிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கோயில் ஆய்வாளர் செல்விக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர்கள் நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து, அதில் இருந்த சுமார் ₹50 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post உடைத்து திருட்டு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Perumal ,Bandaralli ,Karimangalam ,Sami ,
× RELATED பெருமாள் கோயிலுக்கு செல்ல பாதை வசதி கலெக்டரிடம் மனு