×

அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும்

 

நாகப்பட்டினம்,ஜூலை19: தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சியில் கடந்த 2ம் தேதி சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட அந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் எங்களால் பயனடைய முடியவில்லை. எனவே கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகளை உடனடியாக தங்களது ஊராட்சியில் பணிகளை தொடங்க வேண்டும், நூறுநாள் வேலை திட்ட பணிகளை துவங்க வேண்டும், சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

The post அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Minister ,Meiyanathan ,South Poikainallur panchayat ,Nagapattinam ,Gram Sabha ,Velankanni ,Dinakaran ,
× RELATED ரசாயன தொழிற்சாலைகளை கண்காணிக்க...