×

காரைக்காலில் விதிகளை மீறி வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம்

 

காரைக்கால்,ஜூலை 19: காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை சார்பாக வாகன சோதனை மண்டல போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ் தலைமையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முக்கிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில் குறிப்பாக வேக கட்டுப்பாட்டு கருவி, மாசு கட்டுப்பாடு சான்றிதழ், அதிக ஒலி எழுப்பும் ஹாறன் பொருத்தியுள்ள வாகனம் மேலும் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மற்றும் ஜிபிஎஸ் கருவி மற்றும் உரிய ஆவணங்கள் உள்ளனவா என்பன குறித்து பரிசோதனை செய்தனர்.

முறையான ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட ஆட்டோ மற்றும் தனியார் பேருந்திற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அபராத தொகையை கட்டுமாறு போக்குவரத்து துறை அதிகாரிகள் வாகன ஓட்டுநர்களுக்கு ஆணை பிறப்பித்தன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு பிறகு சமர்ப்பிக்காத ஆவணங்களுக்கு உண்டான அபராத தொகை விதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உதவி மோட்டார் வாகன ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

The post காரைக்காலில் விதிகளை மீறி வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Karaikal District Administration ,Transport Department ,Zonal Traffic Officer ,Prabhakar Rao ,Dinakaran ,
× RELATED திருச்சியில் இருந்து காரைக்கால்...