×

சிவகாசியில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி நாளை துவக்கம்

 

சிவகாசி, ஜூலை 19: சிவகாசியில் மாநில அளவிலான பேட்மிண்டன் தரவரிசைப் போட்டிகள் நாளை தொடங்கி வரும் 24ம் தேதி வரை நடைபெறுகின்றது. இது குறித்து சிவகாசியில் விருதுநகர் மாவட்ட ஷட்டில் அசோஷியேசன் தலைவர் பார்த்திபன் கூறுகையில், தமிழ்நாடு பேட்மிண்டன் அசோஷியேஷன் அங்கீகாரத்தோடு விருதுநகர் மாவட்ட ஷட்டில் அசோஷியேசன் சார்பாக நாளை முதல் வரும் 24ம் தேதி வரை 5 நாட்கள் மாநில அளவிலான 19 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கான பேட்மிண்டன் தரவரிசைப் போட்டிகள் (ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர்) சிவகாசி அன்சோ ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெறுகின்றது. இதில் 350க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

The post சிவகாசியில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி நாளை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Virudhunagar District Shuttle Association ,President ,Parthiban ,Tamil Nadu Badminton Association ,
× RELATED சிவகாசி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை