×

டூவீலர் மீது காட்டுப்பன்றிகள் மோதி விவசாயி படுகாயம்

தேன்கனிக்கோட்டை, ஜூலை 19: தேன்கனிக்கோட்டை அருகே, பாலதோட்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (42). இவர் நேற்று முன்தினம் இரவு, டூவீலரில் தேன்கனிக்கோட்டையிலிருந்து பாலதோட்டனப்பள்ளி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். கெண்டிகானப்பள்ளி முனியப்பன் கோயில் அருகே சென்ற போது, 20க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள், திடீரென சாலையின் நடுவே புகுந்தன. அப்போது, டூவீலர் மீது கும்பலாக வந்து சில காட்டு பன்றிகள் மோதின. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முருகேசன் படுகாயம் அடைந்தார். இதை கண்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, முருகேசனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

The post டூவீலர் மீது காட்டுப்பன்றிகள் மோதி விவசாயி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Murugesan ,Balathottanapalli ,Paladottanapally village ,Kendiganapalli ,Muniappan ,
× RELATED கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்