×

நாளை நடக்கிறது தனியார் வேலை வாய்ப்பு முகாம்

 

விருதுநகர், ஜூலை 18: சாத்தூர், மேட்டமலை அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. அதன்படி படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சாத்தூர், மேட்டமலையில் அமைந்துள்ள அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெறவுள்ளது. இம்முகாமில் 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளார்கள்.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலை நாடுநர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து விட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. இவ்வாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

The post நாளை நடக்கிறது தனியார் வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Sattur ,Mattamalai Government College of ,Arts ,and Sciences ,Virudhunagar District Employment Office ,Dinakaran ,
× RELATED விருதுநகரில் காவல்துறையினர் கையில்...