×

குடும்ப தகராறில் இளம்பெண் மாயம்

கிருஷ்ணகிரி, ஜூலை 18: கிருஷ்ணகிரி கத்தாழைமேடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (30). இவரது மனைவி ஜெயலட்சுமி (24). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த ஜெயலட்சுமி, வீட்டில் இருந்து வெளியே சென்றார். மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மகாராஜகடை போலீசில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குடும்ப தகராறில் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : KRISHNAGIRI ,ASOKUMAR ,KATALAYMADU ,Jayalakshmi ,
× RELATED கிருஷ்ணகிரியில் சிவராமன் தந்தை...