×

திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு சாவு கணவர் அதிரடி கைது

புவனகிரி, ஜூலை 18: புவனகிரி அருகே உள்ள பெருமாத்தூரில் வசித்து வருபவர் செல்வகுமார்(38). இவர் தனது மனைவி சூர்யா (32) என்பவருடன் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 மாதங்களே ஆனது. திருமணத்திற்கு ஏற்பட்ட கடனை அடைக்க செல்வகுமார் தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு தந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சூர்யா கடந்த 25ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த சூர்யாவின் உறவினர்கள் சின்னசேலத்தில் இருந்து வந்து புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். திருமணம் ஆகி 10 மாதத்தில் சூர்யா இறந்ததால், இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி விசாரணை நடத்தி வந்தார். அவரது விசாரணையில், வரதட்சணை கொடுமை காரணமாகவே சூர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கை வரதட்சணை மரணம் பிரிவின் கீழ் புவனகிரி போலீசார் மாற்றம் செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சூர்யாவின் கணவர் செல்வகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு சாவு கணவர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Bhubanagiri ,Selvakumar ,Perumathur ,Surya ,
× RELATED உண்டுஉறைவிட படிப்பிற்கான...