×

பால் உற்பத்தியாளர் சங்க ஊழியர் பைக் மோதி பலி

 

பாகூர், ஜூலை 17: கரையாம்புத்துார் அடுத்த பனையடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (47). இவர் பிள்ளையார்குப்பம் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 13ம் தேதி இவர், தனது பைக்கில் சுபநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கரையாம்புத்துார் நோக்கி சென்றார். அப்போது பாலம் அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த பைக் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பத்மநாபனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.  இது குறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

The post பால் உற்பத்தியாளர் சங்க ஊழியர் பைக் மோதி பலி appeared first on Dinakaran.

Tags : BAGUR ,PADMANAPAN ,PANAYADIKUPPAM AREA ,KARAYAMBUTHUR ,Pillaiyarkupam Milk Producers Association ,Karayambutar ,Milk Manufacturer Association ,Moti Bali ,
× RELATED பாகூரில் இருந்து மேல்மலையனூருக்கு...