×

தூத்துக்குடியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி, ஜூலை 17: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், நாளை (18ம் தேதி) நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை (18ம் தேதி) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நடைபெறுகிறது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பங்கேற்று விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தூத்துக்குடியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,District Collector ,Lakshmipathi ,Redressal Day ,
× RELATED தூத்துக்குடி டவுன் கண்ட்ரோல் ரூமில் புதிதாக சிசிடிவி கேமரா அமைப்பு