×

மாடு முட்டி முதியவர் சாவு

திருமங்கலம், ஜூலை 17: திருமங்கலம் அருகே மாடு முட்டி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருமங்கலம் அருகேயுள்ள வாகைகுளம் தோட்டத்து வீட்டினை சேர்ந்தவர் ரவி(58). இவர் தனது தோட்டத்தில் மாட்டை பிடித்து கட்டும் போது மிரண்ட மாடு திடீரென பாய்ந்து முட்டியது. இதில் வலது பக்க மார்பு பகுதியில் பலத்த காயமடைந்த ரவி மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாடு முட்டி முதியவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Ravi ,Vagaikulam garden ,
× RELATED திருமங்கலம் அருகே கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி பலி