×

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சோழவந்தான், ஜூலை 17: சோழவந்தானில் ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் உமா மகேஸ்வரன், வேல்பாண்டி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் மதவாதம், விலைவாசி உயர்வு, தனியார் மயமாக்கல் உள்ளிட்ட ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Marxist Party ,Cholavantan ,Vadipatti ,Union Secretary ,Ponraj ,District Administrators ,Uma Maheswaran ,Velpandi ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது...