×

முற்றுகை போராட்டம்

நிலக்கோட்டை, ஜூலை 16: சின்னாளபட்டி மேட்டுப்பட்டியில் உள்ள அம்மன் கோயில் திருவிழா வழிபாட்டு முறை குறித்து பேரூராட்சியில் வரிவசூல் ஊழியராக பணிபுரியும் கருப்பையா என்பவர் முகநூலில் அவதூறாக பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் சின்னாளபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மேட்டுப்பட்டி பகுதி மக்கள் காந்தி மைதானத்தில் இருந்து ஊர்வலமாக வந்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கருப்பையாவை பணிநீக்கம் செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி தலைவர் பிரதீபா பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தததையடுத்து அணைவரும் கலைந்து சென்றனர்

The post முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Karupiya ,Facebook ,Amman Koil festival ,Chinnalapatti Mettupatti ,Chinnalapatti ,
× RELATED நிலக்கோட்டை முசுவனூத்துவில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு