×

பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களின் காவலை வரும் 29ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!!

கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களின் காவலை ஜூலை 29ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1ஆம் தேதி பாம்பன் பகுதியிலிருந்து 4 நாட்டு படகுகளில் 25 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது.

இதற்கு, பாம்பன் பகுதி மீனவர்கள் இந்திய எல்லையில் கைது செய்ததாக குற்றசாட்டு வைத்தனர். இதனை அடுத்து மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி 2ஆம் தேதி காலையில் கடலில் இறங்கி போராட்டம், சாலை மறியல் போராட்டம், ரயில் மறியல் போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை அறிவித்து வந்தனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் இன்று மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீனவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் 15 நாட்களுக்கு மீனவர்களின் காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இத்தகைய இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு மீனவர்களையும், மீனவ கும்பங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து, மீனவ அமைப்புகள் இன்னும் 1 மணி நேரத்திற்குள் இலங்கை அரசுக்கு எதிராக அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக மீனவ கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

The post பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களின் காவலை வரும் 29ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Bomban Patrol ,Colombo ,Sri Lankan Navy ,Pamban ,Bombon Patrol ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை