×

முத்துப்பட்டியில் நாளை தொழில் பழகுநர் பயிற்சி மேளா

 

சிவகங்கை, ஜூலை 14: சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:இந்திய அரசு திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் ஆணையரகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து நடத்தும் தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான சிறப்பு மேளா நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு ஐடிஐல் நடைபெறவுள்ளது.

இந்த தொழிற் பழகுநர் பயிற்சி மேளாவில் மாநில அரசு நிறுவனங்கள் மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் நேரடியாக ஒரே இடத்தில் தொழிற் பழகுநருக்கான சேர்க்கை நடத்த உள்ளனர். புதிய நிறுவனங்களும் கலந்து கொண்டு பயிற்சியாளர்களை தேர்வு செய்யலாம். ஐடிஐ மற்றும் 8ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படித்த மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விபரங்களக்கு 04575 290625 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94990 55781 என்ற எண்ணிலோ அல்லது உதவி இயக்குநர், மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலக முதல் மாடி, சிவகங்கை என்ற முகவரியிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post முத்துப்பட்டியில் நாளை தொழில் பழகுநர் பயிற்சி மேளா appeared first on Dinakaran.

Tags : Muthupatti ,Sivagangai ,Asha Ajith ,Government of India Ministry of Skill Development and Entrepreneurship ,Commission ,Department of Employment and Training ,
× RELATED மாஜி விளையாட்டு வீரர் ஓய்வூதியம் பெற அழைப்பு