×

கோயில் குளத்தை சுத்தம் செய்ய கோரிக்கை

 

மண்டபம்,ஜூலை 14: மண்டபம் ஒன்றியம் வேதாளை ஊராட்சி எடையர்வலசை கிராம பகுதியில், ராமநாதபுரம்-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை பக்தர்கள் அதிகமானவர் வருகை தருவார்கள். இந்த நிலையில் முருகன் கோயிலுக்கு வருகை தரும் பெரும்பான்மையான பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம்.

இந்த நிலையில் குளம் மிகவும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் நிரம்பி மாசுபட்டுள்ளது. இதனால் தொற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் இந்த குளத்தை சுத்தம் செய்து மழை நீர் தேக்கம் தங்குவதற்கு ஆழப்படுத்த வேண்டும் என பக்தர்களும் அந்த கிராமப் பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோயில் குளத்தை சுத்தம் செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Murugan Temple ,Ramanathapuram-Rameswaram National Highway ,Mandapam Union Vedalai Panchayat Vedhayarvalasai ,Murugan ,
× RELATED வாழப்பாடி முருகன் கோயில் அருகே மலையேறிய சிறுமி தவறி விழுந்து படுகாயம்..!!