×

திண்டுக்கல் மாவட்டத்தில் குரூப் 1 தேர்வை 4,229 எழுதினர்

 

திண்டுக்கல், ஜூலை 14: தமிழகத்தில் நேற்று குரூப் 1 தேர்வு நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தேர்வு மையத்தை கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை போட்டி தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 22 தேர்வு மையங்களில் 6,200 நபர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 4,229 நபர்கள் தேர்வு எழுதினர். 1,971 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதியோர் 68 சதவீத பேர் ஆவர். தேர்வினை கண்காணிக்க 6 நடமாடும் குழுக்கள், 2 பறக்கும் படை, 23 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் பணியில் இருந்தனர். தேர்வு மையங்களில் தேர்வர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு தேவையான குடிநீர் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டியிருந்தது. இவ்வாறு தெரிவித்தார்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் குரூப் 1 தேர்வை 4,229 எழுதினர் appeared first on Dinakaran.

Tags : Dindigul district ,Dindigul ,Tamil Nadu ,Collector ,Poongodi ,Dindigul St. Marianna Secondary School, College of Arts and Sciences of Meenadashi ,DNBSC ,Dinakaran ,
× RELATED கோபுர கலசம் விற்கும் ரைஸ்புல்லிங்...