×

கந்தர்வகோட்டை நகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி தொடங்க வேண்டும்

 

கந்தர்வகோட்டை, ஜூலை 13: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பெரிய கடை வீதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொலைபேசி மற்றும் ஏடிஎம் மெஷின் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு, வியாபார சம்பந்தப்பட்ட கணக்கு மற்றும் நிரந்தர வைப்பு தொகை கணக்கு, தங்க நகை கடன் ஆகிய வரவு செலவு செய்து வருகிறார்கள்.

இந்த வங்கி தொலைபேசி இல்லாததால் வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை வங்கியில் ஏடிஎம் மிஷின் இல்லாததால் நேரில் சென்று பணம் எடுக்கும் சூழ்நிலை அதிகாரிகள் வெளியில் எடுத்து கொள்ள அறிவுறுத்துவதால் தனியாரிடம் ஆதார் கார்டு அல்லது ஏடிஎம் கார்டு மூலம் பணம் பெற வேண்டி உள்ளது. அதற்கு தனியார் நிறுவனங்கள் கட்டணம் பெற்றுகொள்கிறது. எனவே வங்கி நிர்வாகம் உடனடியாக தொலைபேசி மற்றும் ஏடிஎம் மிஷின் ஆகியவற்றை செல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கிறார்கள்.

The post கந்தர்வகோட்டை நகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி தொடங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Gandharvakota ,Kandarvakottai ,Kandarvakot Periya Kada Road ,Pudukottai ,
× RELATED கந்தர்வகோட்டை அரசு பள்ளிகளில் தேசிய குடற்புழு நீக்க நாள் அனுசரிப்பு