×

சிவகாசி, சாத்தூரில் சஸ்பெண்ட் செய்த பட்டாசு ஆலைகளை விடுவிக்க வேண்டும்: அமைச்சரிடம் மனு

 

சிவகாசி, ஜூலை 13: சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை உடனடியாக விடுவிக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிவகாசி மாநகர மாவட்ட செயலாளர் செல்வின். ஏசுதாஸ், மாவட்ட அமைப்பாளர் பைக் பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மனு கொடுத்தனர்.

அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது: சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை வெகு விரைவாக திறக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் பட்டாசு உரிமையாளர்களுக்கும், பட்டாசு தொழிலாளர்களுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படும். எனவே சஸ்பெண்ட் பட்டாசு ஆலைகளை திறப்பதற்கு உண்டான வழிமுறைகளை மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், மாவட்ட கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

The post சிவகாசி, சாத்தூரில் சஸ்பெண்ட் செய்த பட்டாசு ஆலைகளை விடுவிக்க வேண்டும்: அமைச்சரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Sivakasi, Chatur ,Sivakasi ,Sivakasi Metropolitan District ,Selvin ,Liberation Tigers Party ,Chatur ,Esudas ,Pike Pandian… ,Dinakaran ,
× RELATED சிவகாசி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை