×

அன்னவாசல் மணல் கடத்திய லாரி பறிமுதல்

விராலிமலை, ஜூலை 12: அன்னவாசல் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை 6 யூனிட் மணலுடன் போலீசார் பறிமுதல் செய்து உரிமையாளர் மீது வழக்கு பதிந்தனர். அன்னவாசல் ஆற்றுப்படுகளில் இருந்து சிலர் பொக்லேன் இயந்திரம் மூலம் அனுமதியின்றி மணல் அள்ளி சள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து கரந்தபட்டி பகுதியில் எஸ்ஐ வீரமுத்து தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கரந்தபட்டி பேருந்து நிறுத்தம் அருகே மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அனுமதியின்றி ஆற்று மணல் 6 யூனிட் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதன் உரிமையாளர் புல்வயல் மாரிராஜன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post அன்னவாசல் மணல் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Annavasal ,Viralimalai ,Poklan ,Dinakaran ,
× RELATED விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் பகுதி பள்ளிகளில் ஆசிரியர் தின விழா