×

கிடாய் முட்டு போட்டி

 

மதுரை, ஜூலை 12: மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கவண்டன்பட்டி பகுதியில் உள்ள வீரபத்திரசாமி கோயில் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பாரம்பரிய கிடாய் முட்டு சண்டை போட்டியை, அரசு விதிமுறைகளின்படி நடத்த ஐகோர்ட் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தகுந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு கிடாய் முட்டு சண்டை போட்டியை நடத்த, மனுதாரருக்கு மதுரை கலெக்டர் உத்தரவிடலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.

The post கிடாய் முட்டு போட்டி appeared first on Dinakaran.

Tags : Kitai prop competition ,Madurai ,Prakash ,Usilambatti ,Veerabhatirasamy temple festival ,Kavandanpatti ,Kitai… ,Kitai Muttu Botti ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...