×

கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

தர்மபுரி, ஜூலை 11: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் போலீஸ் எஸ்ஐ யுவராஜன் தலைமையிலான போலீசார், ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, செம்மேடு காவிரி ஆற்றங்கரையோரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்தது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் கள்ளச்சாராயம் காய்ச்சிய, அதே பகுதியை சேர்ந்த ராஜூ (55) என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 5லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,SI Yuvarajan ,Ariyur Police ,Dharmapuri District ,Semmedu ,Cauvery river ,
× RELATED ஓட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட...