×

மனு கொடுக்கும் போராட்டம்

ராஜபாளையம், ஜூலை 10: ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் 4 மாதங்களுக்கு மேலாக பணி வழங்காததை கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.  விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வரதராஜன், சிபிஐ ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய ஊராட்சித் தலைவர் விவேகானந்தன், 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்ககோரி 2 மாதங்களுக்கு முன்னரே ஊராட்சி சார்பில் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் மற்றும் வட்டாட்சியர்கள் நிதி மற்றும் புதிதாக கண்மாய் தோண்டும் பணிக்கான இடத்தினை தேர்வு செய்தவுடன் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

The post மனு கொடுக்கும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Gee Rajakularaman panchayat ,Agricultural Labor Union District ,Varadarajan ,CPI Union ,Dinakaran ,
× RELATED ராஜபாளையத்தில் தந்தை, மகன் மீது தாக்குதல்: 5 பேர் கைது