×

இளம் பெண்ணிடம் செல்போன் பறித்தவர்கள் கைது

மதுரை, ஜூலை 10:மதுரை விளாங்குடி பகுதியில் இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்தவர் ராம்சாகர் மகள் பிரியா(28) .இவர் மதுரையில் எஸ்எஸ்ஐசி சிறப்பு தேர்வை எழுதிவிட்டு, தனது சகோதரியுடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல் மெயின் ரோடு விளாங்குடியில் கார் ஷோரூம் அருகே சென்று கொண்டிருந்த போது, அவர்களைத்தொடர்ந்து டூவீலரில் வந்த 2 சிறுவர்கள், பிரியா கையில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து பிரியா செல்லூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

The post இளம் பெண்ணிடம் செல்போன் பறித்தவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Vlangudi ,Ramsagar ,Priya ,Vadamadurai, Dindigul district ,SSIC ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...