×

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: 5 பேர் மீது வழக்கு

விருத்தாசலம், ஜூலை 9: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள சிறுவம்பார் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் மகன் கோவிந்தராஜ். இவருக்கும் 15 வயது சிறுமிக்கும் கடந்த மாதம் 9ம் தேதி திருமணம் நடத்த இரு வீட்டார் முடிவு செய்துள்ளனர். அதன்படி பத்திரிக்கை அடித்து உறவினர்கள் அனைவருக்கும் கொடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற தயார் நிலையில் இருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ஒன்றிய விரிவாக்க அலுவலர் பாரதி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் 8ம் தேதி சென்று சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதை தொடர்ந்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விரிவாக்க அலுவலர் பாரதி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார், சிறுமியின் திருமணத்தை நடத்த இருந்த கோவிந்தராஜ் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Virudthasalam ,Kasinathan ,Govindaraj ,Niuvambar ,Mangalampet ,Virudthashalam ,
× RELATED விஷம் குடித்து அரசு பேருந்து ஓட்டுனர் சாவு