×

பழநியில் கொசு உற்பத்தியை தடுக்க தீவிர நடவடிக்கை

பழநி, ஜூலை 9: பழநி நகரில் அதிகரித்துள்ள கொசுக்களின் உற்பத்தியை தடுக்க நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது: பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், சத்திரங்கள், காலி மனைகள், உணவகங்கள், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கீழ்நிலை, மேல்நிலை தொட்டிகள், குடிநீர் சேமிப்பு பிளாஸ்டிக் தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள் ஆகியவற்றில் கொசுப்புழு உருவாகாதவாறு மூடி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உடைந்த வாளி, பிளாஸ்டிக் கப், பூந்தொட்டி, ஆட்டுக்கல், சிரட்டை, பயனற்ற நிலையில் இருக்கும் கிரைண்டர், பிரிட்ஜ் ஆகியவற்றை அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் வீடு, வீடாக சென்று அபேட் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இதுபோல் நகரில் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தனர்.

The post பழநியில் கொசு உற்பத்தியை தடுக்க தீவிர நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani ,
× RELATED பழனி முருகன் கோயில் கிரிவலப்பாதையில்...