×

பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை, ஜூலை 9: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு ராசா அருண்மொழியை துணைத்தலைவராக கொண்டு தமிழ்நாடு வாரியம் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் தலைவராகவும். சீர்மரபினர் நல பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை.

கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை. மகப்பேறு உதவித்தொகை. மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல், முதியோர் ஓய்வூதியம் மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச்சேர்ந்தவர்கள், 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில் நிலமற்ற கூலி. உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோரிகள் தங்கள் உறுப்பின் பதிவினை விரைவில் புதுப்பித்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

The post பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : MAYILADUDHARA ,TAMIL NADU BOARD ,RAZA ARUNMOZHI ,Sirmarabinari ,Backward Welfare Board ,Dinakaran ,
× RELATED தனிக்குடித்தனத்துக்கு கணவர்...